NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்
    இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்

    இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Feb 13, 2023
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த சம்பவத்தின் பொழுது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    அந்த பிரச்சனையில் பல அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், இது தொடர்பாக அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பணி நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    ரூ.50,000 அபராதம்

    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது தெரியாமல் வழக்கு தொடர்ந்த மனுதாரர்

    மேலும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமைச்செயலாளரிடம் அரசாணையில் பெயர்களை இடம்பெற செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் கடந்த ஆண்டு ஜனவரி 12ம்தேதி தமிழக முதல்வரின் முகவரித்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.

    அந்த புகார்மனு மீதான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பாலசந்தர் மனுவில் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிமீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    அதுகுறித்து தெரியாமல் வழக்கு தாக்கல் செய்ததற்காக பாலசந்தருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025