NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    இந்தியா

    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023, 10:42 am 1 நிமிட வாசிப்பு
    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    46வது சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவுற்றது

    சென்னையிலுள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி தமிழக முதல்வர் துவக்கிவைத்தார். இதில் பல்வேறு பதிப்பாளர்கள் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர். இந்த கண்காட்சியில் புத்தகங்கள் தனித்தனி அரங்குகள் அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்ததால் வருவோர் தங்களுக்கு வேண்டியவைகளை வாங்கி செல்ல எளிதாக இருந்தது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து 17 நாட்கள் நடந்த இந்த புத்தக கண்காட்சி நேற்று(ஜன.,22) முடிவடைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்த புத்தக திருவிழாவிற்கு அதிக வாசகர்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, இந்த 17 நாட்களில் 16 லட்ச வாசகர்கள் வருகை தந்து சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    அதிகரித்த வாசகர்கள் கூட்டம் - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்று தீர்ந்தது

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கலந்துகொள்ள முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர். புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க பல எழுத்தாளர்களும் வருகை தந்திருந்தனர். புத்தகங்களை வாங்குவோர் வசதிக்காக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ஏதுவாக ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்கள் அமைக்கப்பட்டதோடு, பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை வசதியும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது என்று பபாசி செயலாளர் முருகன் தகவல் அளித்துள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சி ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் இந்திய அணி
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா

    சென்னை

    சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை ஆஸ்திரேலியா
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    விரைவில் AI மாற்று மொழிகளிலும்.. சென்னை IIT இயக்குனர் காமகோட்டி தகவல் தொழில்நுட்பம்
    நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம் தங்கம் வெள்ளி விலை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023