NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    46வது சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவுற்றது

    சென்னையில் 17 நாட்கள் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    10:42 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையிலுள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை ஜனவரி 6ம் தேதி தமிழக முதல்வர் துவக்கிவைத்தார்.

    இதில் பல்வேறு பதிப்பாளர்கள் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து புத்தகங்களை விற்பனை செய்து வந்தனர்.

    இந்த கண்காட்சியில் புத்தகங்கள் தனித்தனி அரங்குகள் அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்ததால் வருவோர் தங்களுக்கு வேண்டியவைகளை வாங்கி செல்ல எளிதாக இருந்தது என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து 17 நாட்கள் நடந்த இந்த புத்தக கண்காட்சி நேற்று(ஜன.,22) முடிவடைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்த புத்தக திருவிழாவிற்கு அதிக வாசகர்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி, இந்த 17 நாட்களில் 16 லட்ச வாசகர்கள் வருகை தந்து சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    பபாசி செயலாளர் தகவல்

    அதிகரித்த வாசகர்கள் கூட்டம் - ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்று தீர்ந்தது

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கலந்துகொள்ள முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.

    புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க பல எழுத்தாளர்களும் வருகை தந்திருந்தனர்.

    புத்தகங்களை வாங்குவோர் வசதிக்காக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ஏதுவாக ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்கள் அமைக்கப்பட்டதோடு, பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை வசதியும் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த கண்காட்சியில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது என்று பபாசி செயலாளர் முருகன் தகவல் அளித்துள்ளார்.

    மேலும் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்ட தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சி ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025