NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியாவின் 3 கட்டத் திட்டம் இதுதான்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியாவின் 3 கட்டத் திட்டம் இதுதான்
    சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியாவின் 3 கட்டத் திட்டம்

    பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரைத் தடுக்க இந்தியாவின் 3 கட்டத் திட்டம் இதுதான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 26, 2025
    07:41 am

    செய்தி முன்னோட்டம்

    சிந்து நதியிலிருந்து எந்த நீரும் வீணாகிவிடவோ அல்லது பாகிஸ்தானுக்குள் பாயவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்யும் என்று நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    நதியின் நீர் பாகிஸ்தானை அடைவதைத் தடுக்க குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால என மூன்று முனைகளில் திட்டங்களை அது அறிவித்தது.

    பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளால் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

    நிறுத்தி வைப்பு

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

    பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றதால் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது கண்டறியப்பட்டதால் இந்தியா உடனடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.

    இந்த இடைநிறுத்ததின் காரணத்தால், சிந்து ஆணையர்களுக்கு இடையிலான சந்திப்புகள், தரவு பகிர்வு மற்றும் புதிய திட்டங்களின் முன்கூட்டியே அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தக் கடமைகளையும் இந்தியா நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒப்பந்தம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானுடன் ஒப்புதல் அல்லது ஆலோசனை இல்லாமல் நதியில் அணைகள் கட்ட இந்தியா சுதந்திரமாக உள்ளது.

    நீண்டகால திட்டம்

    சிந்து நதி நீர் இடைநிறுத்தம்: இந்தியாவின் நீண்டகால திட்டம் என்ன?

    மத்திய அரசு தனது முடிவை செயல்படுத்துவதில் மத்திய அமைச்சர்கள் பல பரிந்துரைகள் குறித்து விவாதித்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

    அணைகளைத் தூர்வாருதல், நதி நீரைத் திருப்பிவிடுதல் மற்றும் புதிய அணைகள் கட்டுதல் ஆகியவை விவாதிக்கப்பட்ட நீண்டகாலத் திட்டங்களில் அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நடவடிக்கைக்குப் பிறகு புதிய திட்டங்களுடன் ஜம்மு காஷ்மீருக்கு மிகப்பெரிய மின்சாரத் திறனையும் இந்தியா சேர்க்க முடியும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த ஒப்பந்தத்தில், எந்தவொரு புதிய திட்டப் பணிகளுக்கும் பாகிஸ்தானுக்கு ஆறு மாத கால அறிவிப்பை இந்தியா வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் இப்போது அது நடக்காது என்று அவர்கள் கூறினர்.

    தாக்கம்

    பாகிஸ்தானில் பெரும் தாக்கம்

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பது பாகிஸ்தானின் விவசாயப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், முக்கியமான நீர் தரவு பகிர்வை சீர்குலைத்து, முக்கிய பயிர் பருவங்களில் நீர் ஓட்டத்தைக் குறைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    உலக வங்கியின் தரகுடன், இந்த ஒப்பந்தம் கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றை இந்தியாவிற்கும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றை பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது. சராசரியாக ஆண்டுக்கு சுமார் 135 MAF நீர் ஓட்டம் பாகிஸ்தானுக்கு பெரும்பாலும் ஒதுக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    மத்திய அரசு
    பஹல்காம்

    சமீபத்திய

    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா
    கத்தாரில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை' ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்

    இந்தியா

    ₹63,000 கோடிக்கு 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்திய கடற்படை கடற்படை
    Fact Check: பிஎம் மோடி ஏசி யோஜனாவின் கீழ் இலவச ஏசி வழங்குகிறதா மத்திய அரசு? உண்மை இதுதான் மத்திய அரசு
    அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்கா
    உங்கள் மொபைலுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் ஏர்டெல்லின் புதிய AI தொழில்நுட்பம் ஏர்டெல்

    பாகிஸ்தான்

    பலூச் தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தான் பயணிகள் ரயிலை கடத்தினர்; வீடியோ  தீவிரவாதிகள்
    பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்  ரயில்கள்
    ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது உத்தரப்பிரதேசம்
    214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை உலகம்

    மத்திய அரசு

    நடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல் இந்தியா
    தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை எக்ஸ்
    357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு ஆன்லைன் கேமிங்
    ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு: தேதி, தகுதி மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் ஓய்வூதியம்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு பாகிஸ்தான்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025