NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்
    இந்தியா

    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்

    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்
    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023, 11:18 am 1 நிமிட வாசிப்பு
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக பிராந்திய மொழிகளை பயன்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துபூர்வமாக தனது பதிலினை அளித்துள்ளார். அந்த பதிலில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் 348(1)(a) கீழ் மாநில உயர்நீதிமன்றங்கள் உரிய அனுமதி பெற்று வழக்காடு மொழியினை தங்கள் பிராந்திய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். அதன்படி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி பயன்படுத்தலாம் என அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகம் அனுப்பிய கோரிக்கை கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

    தொடர்ந்து பேசிய அவர், இதே போல் தமிழ்நாடு, குஜராத், கொல்கத்தா, சத்தீஸ்கர், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களும் தங்கள் தாய்மொழியினை வழக்காடு மொழியாக பெற அனுமதி கோரியது. ஆனால் இது குறித்த ஆலோசனையின் போது உச்சநீதிமன்றம் அனுமதியளிக்க மறுத்தது. இருப்பினும் தமிழகம் மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியது. அதில் உழைநீதிமன்ற தலைமை நீதிபதியின் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் 2ம் கோரிக்கையின் போதும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளிக்க வேண்டாம் என கூறியதால் தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்க முடியவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை இந்தியா
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து இந்தியா
    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு டெல்லி

    மத்திய அரசு

    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல் ஆதார் புதுப்பிப்பு
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா
    பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல் வாகனம்

    நாடாளுமன்றம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு இந்தியா
    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023