NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
    இந்தியா

    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு

    எழுதியவர் Nivetha P
    September 02, 2023 | 07:39 pm 1 நிமிட வாசிப்பு
    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு
    ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஆய்வுக்குழு - மத்திய அரசு

    2024-நாடாளுமன்றம் தேர்தலுடன் இணைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்துவது குறித்த செயல்பாடுகளுக்கான ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இந்நிலையில் தற்போது இக்குழுவில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன், என்.கே.சிங், சுபாஷ் சி.காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை செயல்படுத்த தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள், வாக்குப்பதிவு மற்றும் விவிபிஏடி இயந்திரங்களின் தேவைப்பாடு, ஒரே வாக்காளர் பட்டியல் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த ஆய்வு குழு ஆராய்ந்து தெளிவான அறிக்கையினை விரைவில் தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆய்வு குழு 

    #BREAKING | நாடாளுமன்றம் முதல் கிராம ஊராட்சி வரை ஒரே நேரத்தில் தேர்தல் - ஆய்வுக்குழு அமைத்தது ஒன்றிய அரசு!#SunNews | #OneNationOneElection | #Amithsha pic.twitter.com/LhSoskFxiz

    — Sun News (@sunnewstamil) September 2, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய அரசு
    நாடாளுமன்றம்

    மத்திய அரசு

    'ஒரே நாடு ஒரே தேர்தல்'சாத்தியமா? இதற்கு தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ன? தேர்தல்
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு தேர்தல்
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர்
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்? பிரதமர்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்  இந்தியா
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023