NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது 
    இரு மாணவர்கள் கொலை வழக்கில், சிபிஐ ஏற்கனவே 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என நான்கு குற்றவாளிகளை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மெய்தெய் மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிபிஐயால் கைது 

    எழுதியவர் Srinath r
    Oct 13, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மாநிலத்தில் 2 மெய்தெய் மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது.

    கடத்தப்பட்ட இரண்டு மாணவர்களும் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல் மாயமானர்.

    புனேவில் கைது செய்யப்பட்ட பாவ்ளுன் மங், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அக்டோபர் 16 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதில் பாவ்ளுன் மங்கின் முக்கியமானது என சிபிஐ தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி, இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    விசாரணையில் இதுவரை வெளிவந்த தகவல்கள்

    சிபிஐ விசாரணையில், டேக்யல் பகுதியை சேர்ந்த 20 வயதான ஃபிஜாம் ஹேமன்ஜித் சிங் மற்றும் தேரா பகுதியைச் சேர்ந்த 17 வயதான லுவங்க்பி ஹிஜாம் ஆகிய இருவரும் குக்கி போராளிகளால் ஜூலை 6 ஆம் தேதி கடத்தப்பட்டனர்.

    சிபிஐ, அவர்கள் பிணங்களை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இவர்களது புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி இவர்கள் கொல்லப்பட்டதை உறுதிசெய்தது.

    கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, மாநில அரசு, இணைய சேவைகளை மீண்டும் வழங்கியதற்கு இரண்டு நாட்கள் கழித்து, இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கின.

    ஒரு புகைப்படம் இவர்கள் காட்டிற்குள் தரையில் அமர்ந்திருப்பது போன்றதும், மற்றொரு புகைப்படம் இவர்கள் கொல்லப்பட்டு இருப்பது போன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிபிஐ
    மணிப்பூர்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  உலகம்
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    மணிப்பூர்

    மணிப்பூர் ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை பாஜக
    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி ராகுல் காந்தி
    கனிமொழி, தொல்.திருமாவளவன் உட்பட 20 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூருக்கு பயணம் எதிர்க்கட்சிகள்
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025