NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
    இந்தியா

    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023, 06:30 pm 1 நிமிட வாசிப்பு
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

    ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர், மும்பை மற்றும் காந்திநகர் இடையில் செயல்பட்ட வந்தேபாரத் ரயில் பாதையில் மாடு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வேலியமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கு ரயில்வே கோட்டத்தின் பொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா, மும்பை-காந்திநகரின் ரயில்பாதை இடையே 1.5 மீட்டர் உயரத்திற்கு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வேலிகள் அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று முன்னதாக தகவல் தெரிவித்திருந்தார்.

    ரூ.245.26 கோடி செலவில் வேலி அமைக்கும் பணி

    இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, மும்பை-அகமதாபாத் இடையே 622 கி.மீ., தொலைவுள்ள வந்தே பாரத் ரயில் பாதை மிக முக்கிய வழித்தடமாகும். அதனால் வேலி அமைக்கும் பணியினை ரயில்வே துறை ரூ.245.26 கோடி ஒதுக்கி மேற்கொண்டு வருகிறது. இப்பணியை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மும்பை-அகமதாபாத் ரயில் பாதையிலேயே ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இந்த வேலிகள் மனிதர்கள் மட்டும் கடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதனால், இந்த வேலிகள் ஏரேடைனமிக் டிசைன் கொண்டு வகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    வந்தே பாரத்

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்திய ரயில்வே

    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? ரயில்கள்
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் ரயில்கள்
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்

    வந்தே பாரத்

    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை இந்தியா
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் ரயில்கள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023