NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    சில மாதங்களுக்கு முன்னர், மும்பை மற்றும் காந்திநகர் இடையில் செயல்பட்ட வந்தேபாரத் ரயில் பாதையில் மாடு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க வேலியமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து மேற்கு ரயில்வே கோட்டத்தின் பொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா, மும்பை-காந்திநகரின் ரயில்பாதை இடையே 1.5 மீட்டர் உயரத்திற்கு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வேலிகள் அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது என்று முன்னதாக தகவல் தெரிவித்திருந்தார்.

    622 கி.மீ., வழித்தடம்

    ரூ.245.26 கோடி செலவில் வேலி அமைக்கும் பணி

    இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, மும்பை-அகமதாபாத் இடையே 622 கி.மீ., தொலைவுள்ள வந்தே பாரத் ரயில் பாதை மிக முக்கிய வழித்தடமாகும்.

    அதனால் வேலி அமைக்கும் பணியினை ரயில்வே துறை ரூ.245.26 கோடி ஒதுக்கி மேற்கொண்டு வருகிறது.

    இப்பணியை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    மும்பை-அகமதாபாத் ரயில் பாதையிலேயே ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

    மேலும் இந்த வேலிகள் மனிதர்கள் மட்டும் கடக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதனால், இந்த வேலிகள் ஏரேடைனமிக் டிசைன் கொண்டு வகுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வந்தே பாரத்
    இந்திய ரயில்வே

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    இந்திய ரயில்வே

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? பயனர் பாதுகாப்பு
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025