NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 
    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு

    இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என்று கூறி மோசடி - மாற்றுத்திறனாளி மீது வழக்குப்பதிவு 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தினை சேர்ந்தவர் வினோத் பாபு.

    மாற்றுத்திறனாளியான இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார் என்று செய்திகள் வெளியானது.

    சமீபத்தில் இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து அரசு வேலை வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

    விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரை ஏமாற்றிய வினோத் பாபுவின் புகைப்படம் அண்மையில் இணையத்தில் வைரலானது.

    இதனை கண்ட உண்மையான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உளவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள்.

    அந்த புகாரின் அடிப்படையில் உளவுத்துறை அதிகாரிகள் இவர் குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில் இவர் போலி விளையாட்டு வீரர் என்றும், இவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    கிரிக்கெட்

    வினோத் பாபு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு 

    இதனை தொடர்ந்து அவர் கடையில் வாங்கிய வெற்றி கோப்பைகளை கொண்டு, தான் ஆசியக்கோப்பை வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையினை வென்றதாக கூறி அமைச்சர்கள் உள்பட பலரை ஏமாற்றி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

    இது போன்ற விஷயங்கள் விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் போலியான நபர் என்பதனை உளவுத்துறை உறுதி செய்துள்ளது.

    இதனையடுத்து உண்மையான வீல் சேர் கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

    அந்த புகாரின் அடிப்படையில் தற்போது வினோத் பாபு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று(ஏப்ரல்.,27) 406 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமநாதபுரம்
    இந்தியா
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு செய்தி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது தமிழ்நாடு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை

    இந்தியா

    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  வெளியுறவுத்துறை
    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி கேரளா
    போராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து இந்திய அணி
    இந்தியாவில் ஒரே நாளில் 6,934 கொரோனா பாதிப்பு: 24 பேர் உயிரிழப்பு கொரோனா

    கிரிக்கெட்

    PBKS vs RCB : 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டும் ஆர்சிபி வசமானது ஐபிஎல்
    ஐபிஎல்லில் 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் : விராட் கோலி புதிய சாதனை ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025