
செந்தில் பாலாஜி பதவி நீட்டிப்பிற்கு எதிரான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதனை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குகள் இன்று(ஜூலை.,21)விசாரணைக்கு வந்த நிலையில், ஒரு மாதத்திற்குமேல் காவலிலுள்ள செந்தில் பாலாஜி எவ்வாறு இலாகா இல்லா அமைச்சராக தொடரமுடியும்? என்று ஜெயவர்த்தன் தரப்பில் வாதாடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, 2 வருட சிறைக்கு குறைவாக தண்டனைப்பெற்றவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்னும்பட்சத்தில், எந்த சட்டத்தின் அடிப்படையில் அவர் தகுதி இழந்தவரானார்? என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கேள்வியினை எழுப்பியுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து தமிழக அரசின் வாதங்களுக்காக, இவ்வழக்கு அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செந்தில் பாலாஜி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு
#BREAKING || செந்தில்பாலாஜி வழக்கு - தள்ளிவைப்பு
— Thanthi TV (@ThanthiTV) July 21, 2023
அமைச்சர் செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைப்பு
தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்#SenthiBalaji #DMK #chennaihighcourt #ThanthiTv pic.twitter.com/PECmqVfYgh