NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
    இந்தியா

    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023, 01:18 pm 0 நிமிட வாசிப்பு
    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் முதலியன தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள் மதுபான கடை முன்பும், சாலையோரங்கள் மற்றும் அருகில் உள்ள கடை வாசலில் நின்று மது அருந்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று புகார்கள் எழுகிறது. இது குறித்து திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு இது குறித்து விசாரித்தனர்.

    தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்

    முன்னதாக இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடும் மற்றும் திறக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வது எல்லாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது ஏற்கனவே தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்னதாக மூடுவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இவ்வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    இன்று Bipolar Disorder தினம்; இந்த மனநோயின் அறிகுறிகளையும், அதன் தீர்வுகளையும் பற்றி தெரிந்து கொள்க மன ஆரோக்கியம்
    மார்ச் 30க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    "இது எங்க ஏரியா" : சிஎஸ்கேவுக்கு ராசியான சேப்பாக்கம் மைதானம்! கடந்த கால புள்ளி விபரங்கள்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    சென்னை உயர் நீதிமன்றம்

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு அதிமுக
    தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் இந்தியா
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023