NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்
    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

    மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் முதலியன தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

    மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள் மதுபான கடை முன்பும், சாலையோரங்கள் மற்றும் அருகில் உள்ள கடை வாசலில் நின்று மது அருந்துகிறார்கள்.

    இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று புகார்கள் எழுகிறது.

    இது குறித்து திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு இது குறித்து விசாரித்தனர்.

    வழக்கு ஒத்திவைப்பு

    தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்

    முன்னதாக இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடும் மற்றும் திறக்கும் நேரத்தை நிர்ணயம் செய்வது எல்லாம் தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தாங்கள் தலையிட முடியாது என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும் பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது ஏற்கனவே தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்னதாக மூடுவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இவ்வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா

    தமிழ்நாடு

    போகி: மாசு படுவதை தடுக்க பழைய பொருட்களை வாங்கும் மாநகராட்சி! தமிழ்நாடு செய்தி
    ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு: அமைச்சர் சக்கரபாணி இந்தியா
    மாமல்லபுர துணை நகரத்தில் இருந்து சட்டப்பேரவை சர்ச்சைகள் வரை: என்ன நடந்தது இன்று? ஸ்டாலின்
    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025