பலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம்
உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டை அந்நகரின் நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் முன்னிலையில் இந்த இடிப்பு பணி நடைபெற்றிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட சிக்கந்தர் கான், ஃபதேபூரை சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் தலையை செங்கல்லால் நசுக்கி கொன்றார் என்று கூறப்படுகிறது. ஜூன் 23அன்று அதிகாலை பரித்பூரில் உள்ள ஒரு கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்தில் அந்த இளம் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில், வலதுசாரி அமைப்புகள் இதை 'லவ் ஜிஹாத்' என்று குற்றம்சாட்டி வருகின்றன.