NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்
    அமைச்சர் பொன்முடி சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதை கண்டித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, தமிழகஅரசு செயலகம் முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பெங்களுருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானநிலையம் வந்தடைந்தார்.

    அப்போது நிருபர்களை சந்தித்த முதல்வர், "பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளோம். மத்திய பாஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜகவுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது," எனக்கூறினார்.

    card 2

    "அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை"

    தொடர்ந்து பேசிய முதல்வர், " அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கவலைப்படவில்லை. பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பும் பாஜகவின் தந்திரமே இந்த சோதனை.எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை வைத்து சோதனை" எனக்கூறினார்.

    மேலும், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்" என பதிலளித்தார்.

    "ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையினர், திமுகவின் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரெய்டு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    ரெய்டு

    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை  அமலாக்க இயக்குநரகம்

    தமிழ்நாடு

    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு  அரசு மருத்துவமனை
    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  ஜி20 மாநாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  கைது

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    தமிழகம்

    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு திமுக
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025