LOADING...
சென்னை ஆவடியில் பெரும் பரபரப்பு! மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
சென்னை ஆவடி மார்க்கெட் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னை ஆவடியில் பெரும் பரபரப்பு! மார்க்கெட் பகுதியில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2026
06:07 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ஆவடி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தாடைகள் மற்றும் இதர பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன. கடையின் மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைப்பு

விபத்து குறித்து உள்ளூர் பொதுமக்களும் கடை உரிமையாளர்களும் உடனடியாக ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தொடர்ச்சியாகப் போராடி துணிக்கடையில் பற்றி எரிந்த பயங்கர தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் கடையின் உள்ளே இருந்த விலை பல பொருட்கள் சாம்பலாகின.

மதிப்பு

1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

ஆரம்பகட்ட தகவலின்படி, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய ஆடைகளின் மொத்த மதிப்பு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களையும் சேர்த்து சுமார் 1 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் உரிய நேரத்தில் வெளியேறியதால் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement