NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
    இந்தியா

    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு

    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
    எழுதியவர் Nivetha P
    Mar 13, 2023, 06:32 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என கேள்வியெழுப்பினர். அதனை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதனையும் எழுத்துப்பூர்வ முறையில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, மத்திய அரசின் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற 'டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்' தற்போது 9 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு கடந்த மாதம் 19ம் தேதியன்று தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறினார்.

    விசாரணை குழு அமைத்த மத்திய கல்வித்துறை அமைச்சர்

    இதனை தொடர்ந்து அவர், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் இதில் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததோடு, பல்கலைக்கழக வளாகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட விசாரணை குழுவினை அமைத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    நாடாளுமன்றம்
    மத்திய அரசு
    டெல்லி

    நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  இந்தியா
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் இந்தியா

    மத்திய அரசு

    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்  இந்தியா
    கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு இந்தியா

    டெல்லி

    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023