NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் 'வந்தே பாரத்' ரயிலை இயக்கி சாதனை

    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில், இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத்' ரயிலினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்னும் பெருமையினை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார்.

    மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்னும் ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை சுரேகா யாதவ் இயக்கியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில சதாராவில் வசித்து வரும் திருமதி சுரேகா யாதவ் 1989ல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார்.

    ரயில்வே அமைச்சர் பாராட்டு

    கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னரே வந்தே பாரத் ரயிலினை இயக்கினார் சுரேகா யாதவ்

    அதன் பின்னர் இவர் படிப்படியாக உயர்ந்து பல சாதனைகளை புரிந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து அனுபவம் மிக்க இவர் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலினை இயக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

    இந்த பணிக்காக அவர் பல கடினமான பயிற்சிகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

    மிக வேகமாக வரும் இந்த ரயிலில் இருந்து கொண்டு ரயில் சமிக்ஞைகளை கவனித்தல், புதிய அதிநவீன கருவிகளை இயக்குதல் என அனைத்து பயிற்சிகளையும் முடித்த பின்னரே அவர் வந்தே பாரத் ரயிலினை இயக்க துவங்கியுள்ளார்.

    இந்நிலையில் சுரேகாவின் புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வந்தே பாரத்
    ரயில்கள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI இந்தியா
    ரூ.3,700 கோடி கடனை அடைக்க பங்குகளை விற்கிறது அதானி குழுமம்! தொழில்நுட்பம்
    வைரல் செய்தி: மேட்ரிமோனியல் தளத்தில் பதிவிடப்படும் தகவலை கொண்டு, வேலை தேடும் இளம்பெண் வைரல் செய்தி
    இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி உயர்வு! மத்திய அரசு

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ரயில்கள்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025