NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
    இந்தியா

    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை

    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023, 04:22 pm 1 நிமிட வாசிப்பு
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் 'வந்தே பாரத்' ரயிலை இயக்கி சாதனை

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் நிலையில், இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத்' ரயிலினை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்னும் பெருமையினை சுரேகா யாதவ் என்பவர் பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோலாலம்பூர் என்னும் ரயில் நிலையத்தில் இருந்து மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜா முனையம் வரை வந்தே பாரத் ரயிலை சுரேகா யாதவ் இயக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநில சதாராவில் வசித்து வரும் திருமதி சுரேகா யாதவ் 1989ல் இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார்.

    கடினமான பயிற்சிகளை மேற்கொண்ட பின்னரே வந்தே பாரத் ரயிலினை இயக்கினார் சுரேகா யாதவ்

    அதன் பின்னர் இவர் படிப்படியாக உயர்ந்து பல சாதனைகளை புரிந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை. கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து அனுபவம் மிக்க இவர் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலினை இயக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். இந்த பணிக்காக அவர் பல கடினமான பயிற்சிகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மிக வேகமாக வரும் இந்த ரயிலில் இருந்து கொண்டு ரயில் சமிக்ஞைகளை கவனித்தல், புதிய அதிநவீன கருவிகளை இயக்குதல் என அனைத்து பயிற்சிகளையும் முடித்த பின்னரே அவர் வந்தே பாரத் ரயிலினை இயக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் சுரேகாவின் புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    வந்தே பாரத்
    ரயில்கள்

    இந்தியா

    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை இந்தியா
    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க! முதலீட்டு திட்டங்கள்
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே

    வந்தே பாரத்

    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் சென்னை
    மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம் இந்திய ரயில்வே

    ரயில்கள்

    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சென்னை
    நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை
    2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்! தெற்கு ரயில்வே
    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் மதுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023