NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 26, 2024
    07:38 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுக் கொள்கை வழக்கில் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது.

    நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க ரூஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதித்தது.

    அதைத்தொடர்ந்து மூன்று நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட அவர், ஜூன் 29ம் தேதி இரவு 7 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணமோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று மதுபானக் கொள்கை ஊழலில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் ED ஆல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    CBI காவல்

    ரிமாண்ட் காலத்தில் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள்

    ரிமாண்ட் காலத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை தினமும் 30 நிமிடங்களும், அவரது வழக்கறிஞரை தினமும் 30 நிமிடங்களும் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது.

    காவலில் வைக்கப்பட்ட காலத்தில் அவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் வீட்டு உணவுகளை எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக நேற்று ஜூன் 25ஆம் தேதி சிறையில் இருந்து கெஜ்ரிவாலின் வாக்குமூலத்தை சிபிஐ பெற்றுக் கொண்ட பிறகு இன்று காலை விசாரணை நீதிமன்றத்தில் அவரை விசாரணை செய்து கைது செய்தது.

    விசாரணை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ​​ஆவணங்களுடன் அவரை எதிர்கொள்ள கெஜ்ரிவாலின் காவல் தேவை என்று சிபிஐ கூறிய பின்னர் நீதிமன்றம் இந்த ரிமாண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல்

    #WATCH | Delhi CM and AAP National Convenor Arvind Kejriwal taken from the Rouse Avenue Court in Delhi.

    The Court has sent him to a 3-day CBI remand in connection with the Excise policy case. pic.twitter.com/c5cLt4Z0Ou

    — ANI (@ANI) June 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    சிபிஐ
    டெல்லி

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா  டெல்லி
    டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு: இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் அமலாக்க இயக்குநரகம்
    சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது சிறை

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    டெல்லி

    'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்  அரவிந்த் கெஜ்ரிவால்
    'நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி காங்கிரஸ்
    ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு பாஜக
    இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025