NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
    இந்தியா

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    March 16, 2023 | 07:12 pm 1 நிமிட வாசிப்பு
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
    411 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 764 சிறப்பு நீதிமன்றங்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.

    கடந்த 5 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் கேட்ட தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) தலைவர் ஃபவுசியா கான், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, "பலாத்கார வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணைகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 கூறுகிறது(சட்டபிரிவு 173 CrPC)." என்று பதிலளித்துள்ளார்.

    மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த விளக்கம்

    உள்துறை அமைச்சகம்(MHA), நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளை விசாரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் வசதியாக 20 செப்டம்பர், 2018இல் "பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை"(NDSO) தொடங்கியது. குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 இன் படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க "பாலியல் குற்றங்களுக்கான விசாரணை கண்காணிப்பு அமைப்பு" என்ற ஆன்லைன் பகுப்பாய்வுக் கருவியை MHA அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில தடய அறிவியல் ஆய்வகங்களில்(FSL) டிஎன்ஏ பகுப்பாய்வு அலகுகளை வலுப்படுத்த MHA நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன டிஎன்ஏ பகுப்பாய்வு பிரிவை அமைத்ததும் அடங்கும். ஜனவரி 31, 2023 நிலவரப்படி, 411 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 764 சிறப்பு நீதிமன்றங்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    நாடாளுமன்றம்

    இந்தியா

    வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா? சேமிப்பு திட்டங்கள்
    உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா கேரளா
    'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார் பெங்களூர்
    நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி காங்கிரஸ்

    நாடாளுமன்றம்

    அதானி குழும பிரச்சனை: எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுத்து நிறுத்தியது காவல்துறை இந்தியா
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு இந்தியா
    தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு டெல்லி
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023