NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு
    411 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 764 சிறப்பு நீதிமன்றங்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 5 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுமார் 1 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் கேட்ட தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) தலைவர் ஃபவுசியா கான், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, "பலாத்கார வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணைகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 கூறுகிறது(சட்டபிரிவு 173 CrPC)." என்று பதிலளித்துள்ளார்.

    இந்தியா

    மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்த விளக்கம்

    உள்துறை அமைச்சகம்(MHA), நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளை விசாரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் வசதியாக 20 செப்டம்பர், 2018இல் "பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை"(NDSO) தொடங்கியது.

    குற்றவியல் சட்டம் (திருத்தம்), 2018 இன் படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க "பாலியல் குற்றங்களுக்கான விசாரணை கண்காணிப்பு அமைப்பு" என்ற ஆன்லைன் பகுப்பாய்வுக் கருவியை MHA அறிமுகப்படுத்தியுள்ளது.

    மத்திய மற்றும் மாநில தடய அறிவியல் ஆய்வகங்களில்(FSL) டிஎன்ஏ பகுப்பாய்வு அலகுகளை வலுப்படுத்த MHA நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் அதிநவீன டிஎன்ஏ பகுப்பாய்வு பிரிவை அமைத்ததும் அடங்கும்.

    ஜனவரி 31, 2023 நிலவரப்படி, 411 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 764 சிறப்பு நீதிமன்றங்கள் நாடுமுழுவதும் இயங்கிவருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் சென்னை
    வருமான வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை - மார்ச் 31-க்குள் இதை செய்திடுங்க! முதலீட்டு திட்டங்கள்
    இந்தியாவின் காடு, மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது: ISFR அறிக்கை இந்தியா
    ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை வந்தே பாரத்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025