NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு
    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    05:44 pm

    செய்தி முன்னோட்டம்

    அரியலூர் மருத்துவ கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

    இதில் 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    அதன் படி தற்போது இந்த கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு அம்மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு போராட்டத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்போவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இது குறித்த அறிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

    தூக்கிட்டு தற்கொலை

    மத்திய அரசின் நீட் தேர்வு அறிவிப்பால் பறிபோன மாணவியின் உயிர்

    அரியலூர் மாவட்ட குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிட குடும்பத்தில் பிறந்த கூலித்தொழிலாளியின் மகள் தான் அனிதா.

    டாக்டர் ஆகவேண்டும் என்னும் கனவில் தமிழ்வழி வாயிலாக கல்விப்பெற்று 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1176மதிப்பெண்களை அனிதா பெற்றிருந்தார்.

    ஆனால் மத்தியஅரசு 12ம்வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக எடுத்துகொள்ளாமல் நீட்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என கூறியதையடுத்து மனமுடைந்து போனார்.

    ஏழை குடும்பத்தில் பிறந்த அவரால் விலையுயர்ந்த நீட்தேர்வு பயிற்சிகளை மேற்கொள்ளமுடியாது என்பதால்,

    தன்னைப்போல கிராமங்களில் இருக்கும் ஏழை மாணவர்களால் நீட் தேர்வினை எதிர்கொள்ளமுடியாது என்றுகூறி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார்.

    ஆனால் நீதிமன்றம் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடக்கும் என்றுகூறி உத்தரவிட்டதால் அனிதா 2017 செப்டம்பரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    நீட் தேர்வு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ பள்ளி மாணவர்கள்
    வானிலை அறிக்கை: மார்ச் 9- மார்ச் 13 வானிலை அறிக்கை
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு உலக செய்திகள்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025