NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
    இந்தியா

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023, 07:32 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

    தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் என்னும் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலிருந்த வரதராஜ பெருமாள் சிலை, ஸ்ரீ தேவி சிலை, பூதேவி சிலை மற்றும் ஒரு ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட உலோக சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இது குறித்து அக்கோயில் நிர்வாகிகள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள். அதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளோடு இந்த 4 சிலையினை ஒப்பீடு செய்து பார்த்து வந்துள்ளார்கள்.

    அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம்

    இந்நிலையில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததும், அந்த சிலையினை அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் ஏலத்தில் பெற்று சென்றதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொல்லியல் துறை அதிகாரிகள் உதவியோடு களவாடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், அமெரிக்காவில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையினையும் ஒப்பீடு செய்து பார்த்துள்ளார்கள். அதில் இரண்டும் ஒரே சிலை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றினை அளித்துள்ளது. அதன்படி சிலையை ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய நபர் அதனை அமெரிக்க தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளார். பல சோதனைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இச்சிலை தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    ஆஸ்திரேலியா

    தமிழ்நாடு

    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா

    ஆஸ்திரேலியா

    சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை சென்னை
    இந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் இந்தியா
    இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023