NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    07:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் என்னும் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த கோயிலிருந்த வரதராஜ பெருமாள் சிலை, ஸ்ரீ தேவி சிலை, பூதேவி சிலை மற்றும் ஒரு ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட உலோக சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இது குறித்து அக்கோயில் நிர்வாகிகள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள்.

    அதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளோடு இந்த 4 சிலையினை ஒப்பீடு செய்து பார்த்து வந்துள்ளார்கள்.

    சிலை தடுப்புப்பிரிவு அதிகாரிகள்

    அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம்

    இந்நிலையில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததும்,

    அந்த சிலையினை அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் ஏலத்தில் பெற்று சென்றதும் தெரிய வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொல்லியல் துறை அதிகாரிகள் உதவியோடு களவாடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், அமெரிக்காவில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையினையும் ஒப்பீடு செய்து பார்த்துள்ளார்கள்.

    அதில் இரண்டும் ஒரே சிலை என்பது தெரியவந்துள்ளது.

    இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்திற்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றினை அளித்துள்ளது.

    அதன்படி சிலையை ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய நபர் அதனை அமெரிக்க தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

    பல சோதனைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இச்சிலை தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 17- மார்ச் 21 புதுச்சேரி
    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் இந்தியா
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர் பள்ளி மாணவர்கள்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலகம்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025