NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
    சமீபத்தில் தோல் கட்டி நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டபோது இந்த வாரியம் எங்கே சென்றிந்தது: பால் பண்ணையாளர்கள்

    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது.

    அதனால், பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மக்கள் பசு மாடுகளை கட்டி அணைத்து தங்கள் அன்பைப் பகிர வேண்டும் என்று அந்த வாரியம் கேட்டு கொண்டுள்ளது.

    மேலும், அப்படி செய்தால் "உணர்ச்சிச் செழுமை" ஏற்படும் என்றும் "தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மகிழ்ச்சி" கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.

    இதற்கு பதிலளித்த பால் பண்ணையாளர்கள், சமீபத்தில் தோல் கட்டி நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டபோது இந்த வாரியம் எங்கே சென்றிந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

    பொதுவாக, பிப்ரவரி 14 காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அதை கொண்டாடுவது இந்திய கலாச்சாரத்திற்கு முரணானது என்று சில பிரிவினரால் விமர்சிக்கப்படுகிறது.

    இந்தியா

    நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது: AWBI

    பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது என்றும் பல்லுயிரியலை இது குறிக்கிறது என்றும் AWBIயின் செயலாளர் எஸ்.கே. தத்தா கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது.

    "அன்னையைப் போல் ஊட்டமளிக்கும் குணத்தை கொண்டுள்ளதால், பசு மாடுகள் காமதேனு என்றும் கௌமாதா என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தினால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது." என்று கூறியுள்ள அந்த அறிக்கையில்,

    இது தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் மீன்பிடிதுறை ஆகிய அமைச்சகங்களின் வழிகாட்டுதலின் பேரில் வெளியிடப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மீண்டும் விற்பனைக்கு வரும் ரெனால்ட் மற்றும் நிசான் மாடல்கள்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    சாட்ஜிபிடி-யை சமாளிக்க கூகுள் Bard AIஐ அறிமுகம் செய்த சுந்தர் பிச்சை! சாட்ஜிபிடி
    2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இன்னும் நினைவில் இருக்கிறது: அமெரிக்கா உலகம்
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025