NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
    இந்தியா

    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்

    எழுதியவர் Sindhuja SM
    February 09, 2023 | 03:25 pm 1 நிமிட வாசிப்பு
    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
    சமீபத்தில் தோல் கட்டி நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டபோது இந்த வாரியம் எங்கே சென்றிந்தது: பால் பண்ணையாளர்கள்

    இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது. அதனால், பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மக்கள் பசு மாடுகளை கட்டி அணைத்து தங்கள் அன்பைப் பகிர வேண்டும் என்று அந்த வாரியம் கேட்டு கொண்டுள்ளது. மேலும், அப்படி செய்தால் "உணர்ச்சிச் செழுமை" ஏற்படும் என்றும் "தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மகிழ்ச்சி" கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்கு பதிலளித்த பால் பண்ணையாளர்கள், சமீபத்தில் தோல் கட்டி நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டபோது இந்த வாரியம் எங்கே சென்றிந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். பொதுவாக, பிப்ரவரி 14 காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அதை கொண்டாடுவது இந்திய கலாச்சாரத்திற்கு முரணானது என்று சில பிரிவினரால் விமர்சிக்கப்படுகிறது.

    நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது: AWBI

    பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது என்றும் பல்லுயிரியலை இது குறிக்கிறது என்றும் AWBIயின் செயலாளர் எஸ்.கே. தத்தா கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது. "அன்னையைப் போல் ஊட்டமளிக்கும் குணத்தை கொண்டுள்ளதால், பசு மாடுகள் காமதேனு என்றும் கௌமாதா என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தினால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது." என்று கூறியுள்ள அந்த அறிக்கையில், இது தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் மீன்பிடிதுறை ஆகிய அமைச்சகங்களின் வழிகாட்டுதலின் பேரில் வெளியிடப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை உலகம்
    ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள் மாவட்ட செய்திகள்
    Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்! எலக்ட்ரிக் பைக்
    இந்தியாவிற்கு வந்தது ட்விட்டரின் ப்ளூ டிக்! - கட்டணம் எவ்வளவு தெரியுமா? ட்விட்டர் புதுப்பிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023