NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
    இந்தியா

    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி

    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023, 04:50 pm 0 நிமிட வாசிப்பு
    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
    தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை மின்சாரம் தாக்கி பலி

    தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் கெலவல்லி அருகில் உயரழுத்த மின் பாதையினை தொட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விளை நிலங்களில் ஆண் யானை ஒன்று நடமாடி கொண்டு சேதப்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவ்வாறு திரியும் அந்த யானையினை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையே நேற்று(மார்ச்.,17) பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியே இந்த ஆண் யானையானது கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது.

    சட்டவிரோதமாக மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி

    அதன்படி அந்த ஆண் யானையினை பின்பற்றியவாறு வனத்துறையினரும் சென்றுள்ளார்கள். இந்நிலையில் இன்று(மார்ச்.,18) கம்பைநல்லூர் அடுத்த கெலவல்லி அருகே வி.பள்ளிப்பட்ட பகுதியில் உள்ள ஏரிக்கரையில் ஏறுவதற்கு இந்த யானை முயற்சி செய்துள்ளது. அப்போது எதிர்பாரா விதமாக இந்த யானை அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதனால் யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதே போல் கடந்த வாரத்திலும் பாலக்காடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் உள்ள விளை நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    "நானும் பீல்டிங் செய்வேன்" : சேப்பாக்கம் மைதானத்தில் குறுக்கே ஓடிய நாய் ஒருநாள் கிரிக்கெட்
    பெரும்பாலான கணவர்மார்கள், தங்கள் மனைவியிடம் பார்க்கும் குறைகள் என்ன? உறவுகள்
    ஸ்டீவ் ஸ்மித்தை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கிய ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்
    இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் : டேவிட் வார்னர் சாதனை ஒருநாள் கிரிக்கெட்

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தூத்துக்குடி
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு மாவட்ட செய்திகள்
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்

    மாவட்ட செய்திகள்

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது தமிழ்நாடு
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தூத்துக்குடி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023