NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி
    தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை மின்சாரம் தாக்கி பலி

    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி

    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் கெலவல்லி அருகில் உயரழுத்த மின் பாதையினை தொட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விளை நிலங்களில் ஆண் யானை ஒன்று நடமாடி கொண்டு சேதப்படுத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து இவ்வாறு திரியும் அந்த யானையினை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் பல முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே நேற்று(மார்ச்.,17) பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியே இந்த ஆண் யானையானது கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது.

    சம்பவ இடத்திலேயே பலியான யானை

    சட்டவிரோதமாக மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி

    அதன்படி அந்த ஆண் யானையினை பின்பற்றியவாறு வனத்துறையினரும் சென்றுள்ளார்கள்.

    இந்நிலையில் இன்று(மார்ச்.,18) கம்பைநல்லூர் அடுத்த கெலவல்லி அருகே வி.பள்ளிப்பட்ட பகுதியில் உள்ள ஏரிக்கரையில் ஏறுவதற்கு இந்த யானை முயற்சி செய்துள்ளது.

    அப்போது எதிர்பாரா விதமாக இந்த யானை அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்பாதையில் மோதியுள்ளது.

    இதனால் யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதே போல் கடந்த வாரத்திலும் பாலக்காடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் உள்ள விளை நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு நீட் தேர்வு
    தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை மாவட்ட செய்திகள்
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் வேங்கை வயல்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு விழுப்புரம்

    மாவட்ட செய்திகள்

    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025