NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு

    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023
    01:21 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கலாஷேத்ரா கடந்த டிசம்பர் 2022ல் கலாஷேத்ரா முன்னாள் இயக்குனரும், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான லீலா சேம்சன், தன்னுடைய முகநூலில் கலாஷேத்ராவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த ஓர் பதிவினையிட்டு உடனே அதனை நீக்கிவிட்டார்.

    அதில் கடந்த 10 ஆண்டுகளாக ஓர் ஆசிரியர் அங்கிருக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும்,

    அதில் 18 வயது நிரம்பாத சிறுமிகளும் அடக்கம் என்று கூறப்பட்டிருந்தது.

    இது போல் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், கலாஷேத்ரா நிர்வாகிகள் அவசர அவசரமாக விசாரணையினை மேற்கொண்டு, அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டினை ஏற்க மறுத்தனர்.

    மாணவிகள் அதிர்ச்சி

    குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு மரியாதை செலுத்திய நிர்வாகி

    இந்நிலையில் இதுகுறித்து பல புகார்கள் ஏராளமான பெண்களிடம் இருந்து கொடுக்கப்பட்டதை அறிந்த தேசிய மகளிர்ஆணையம் இந்த புகார்கள்மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக டிஜிபி'க்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனடிப்படையில் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி சென்னை மாநகரக்காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பாலியல்தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவரின் பெயரில் சமூகவலைதளத்தில் தகவல் பரவியது.

    ஆனால் அந்த சம்பந்தப்பட்ட மாணவி தனக்கு அதுபோல் எவ்வித பாலியல்தொந்தரவும் ஏற்படவில்லை என்றும்,

    தவறான தகவல்கள் பரவிவருவதாகவும் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

    இதுகுறித்து தற்போது சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் மார்ச்.8பெண்கள் தினத்தன்று குற்றம்சாட்டப்பட்ட அதே ஆசிரியருக்கு கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் மரியாதைசெலுத்தியதை கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள் சுகாதாரத் துறை
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை தமிழ்நாடு
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025