NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!
    கைது செய்யப்பட்ட நபர்கள்(படம்: விகடன்)

    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 22, 2022
    10:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கையை சேர்ந்த 9 பேரை, NIA அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து நேற்று கைது செய்தனர்.

    இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடு பட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிகளையும் குற்றத்தில் தொடர்பு உடையவர்களையும் இங்கு தான் தங்க வைத்திருப்பார்கள்.

    தற்போது, பிற நாடுகளை சேர்ந்த 152 பேர் இந்த திருச்சி சிறப்பு முகாமில் இருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு, கேரள கடல் பகுதியில் ஒரு மீன்பிடி படகில் இருந்து 300கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

    இதன்பிறகு, கடந்த ஜூலை 20ஆம் தேதி, NIA அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரோடு இந்த முகாமை அதிரடியாக சோதனை செய்தனர்.

    போதை பொருள்

    9 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னணி!

    சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட கேரளா போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்கள் சிலருக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகவும் அதனாலேயே அந்த அதிரடி சோதனை நடை பெற்றதாகவும் கூறப்பட்டது.

    அப்போது நடந்த அந்த சோதனையின் போது, இலங்கையை சேர்ந்த 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், செல்போன்கள், பென்டிரைவ்கள், லேப்டாப்கள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

    அதன் பின், இந்த முகாமில் இருப்பவர்கள் NIAவின் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

    இந்த வழக்கிற்கு தேவையான முதற்கட்ட ஆதாரங்களை சேகரித்த NIA, போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கும் இலங்கையை சேர்ந்த 9 பேரை நேற்று(டிச:20) அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்

    இந்தியா

    2023 ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா? - தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாடு
    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? சீனா
    பாகிஸ்தானை சேர்ந்த ஓடிடி தளத்திற்கு தடை ஓடிடி
    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025