NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர் 
    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்

    செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர் 

    எழுதியவர் Nivetha P
    Aug 03, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலம் உத்திரகன்னடா மாவட்டத்தில் கார்வார் என்னும் பகுதியினை சேர்ந்த தம்பதி சந்தோஷ் கல்குட்கர்-சஞ்சனா.

    இந்த தம்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு சானித்யா என பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட்.,2) இந்த தம்பதி தங்கள் இல்லத்தில் செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர்.

    செல்போனில் சார்ஜ் ஏறியதும், போனை எடுத்த தம்பதி, சார்ஜரின் இணைப்பினை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்த சார்ஜர் வயரினை பிடித்து குழந்தை சானித்யா விளையாடி கொண்டிருந்துள்ளார்.

    பின்னர் அந்த வயரினை குழந்தை வாயில் வைத்து விளையாடிய நிலையில், சற்றும் எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    உயிரிழப்பு 

    மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் 

    இது குறித்து தகவல் அறிந்த கார்வார் புறநகர் காவல்துறை விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

    அதில் ப்ளக் பாய்ண்டில் போடப்பட்டிருந்த சார்ஜரின் மின் இணைப்பு அணைக்காமல் விட்டதால் தான் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து குழந்தை சானித்யாவின் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளது.

    பெற்றோரின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் குறித்து காவல்துறை பேசுகையில், செல்போன் சார்ஜ் ஆனதும் உடனே சார்ஜரின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

    இல்லையேல் சார்ஜரை கழற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கர்நாடகா

    வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்  இந்தியா
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  இந்தியா
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  இந்தியா

    காவல்துறை

    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு  வேங்கை வயல்
    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து மெக்சிகோ

    காவல்துறை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025