NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
    உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த சாலைகள்

    உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று(ஜன:7) உத்தரவிட்டார்.

    நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் தாமி, பின் செய்தியாளர்களை சந்தித்து,

    "உயிர்களைக் காப்பாற்றுவதே எங்கள் முதல் கடமை. ஜோஷிமத்தில் ஆபத்தான வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.

    ஜோஷிமத்தின் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களிலும் நாங்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், முதல்வர் தாமி இன்று ஜோஷிமத் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கிறார்.

    ஜோஷிமத்

    தொடர் கண்காணிப்பில் ஜோஷிமத் நகர்:

    கர்வால் ஆணையர் சுஷில் குமார், பேரிடர் மேலாண்மை செயலர் ரஞ்சித் குமார் சின்ஹா ​​மற்றும் நிபுணர்கள் குழு, பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை விரைவில் அப்புறப்படுத்தி, அவர்கள் குடியேறுவதற்கு மாற்று வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், மக்களை விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டு கொண்டுள்ளார்.

    குறுகிய கால செயல் திட்டம், நீண்ட கால செயல் திட்டம் ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு திட்டங்களின் வேலைகளும் உடனடியாக முழு வீச்சில் தொடங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் தாமி கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பொது மக்களை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பரபரப்பு! இந்தியா
    புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய் லாமா குற்றச்சாட்டு சீனா
    இந்திய அரசியல் முதல் சீன அரசியல் வரை: ராகுல் காந்தி-கமல் விவாதம் கமல்ஹாசன்
    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025