NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
    இந்தியா

    உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!

    உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2023, 11:28 am 0 நிமிட வாசிப்பு
    உத்தரகாண்ட் புதையும் நகரம்: 600 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
    உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த சாலைகள்

    உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் பெரும் விரிசல்கள் விழுந்த வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்ற உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று(ஜன:7) உத்தரவிட்டார். நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் ஆலோசித்த முதல்வர் தாமி, பின் செய்தியாளர்களை சந்தித்து, "உயிர்களைக் காப்பாற்றுவதே எங்கள் முதல் கடமை. ஜோஷிமத்தில் ஆபத்தான வீடுகளில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார். ஜோஷிமத்தின் நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களிலும் நாங்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், முதல்வர் தாமி இன்று ஜோஷிமத் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கிறார்.

    தொடர் கண்காணிப்பில் ஜோஷிமத் நகர்:

    கர்வால் ஆணையர் சுஷில் குமார், பேரிடர் மேலாண்மை செயலர் ரஞ்சித் குமார் சின்ஹா ​​மற்றும் நிபுணர்கள் குழு, பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை விரைவில் அப்புறப்படுத்தி, அவர்கள் குடியேறுவதற்கு மாற்று வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும், மக்களை விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டு கொண்டுள்ளார். குறுகிய கால செயல் திட்டம், நீண்ட கால செயல் திட்டம் ஆகியவை தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு திட்டங்களின் வேலைகளும் உடனடியாக முழு வீச்சில் தொடங்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் தாமி கூறி இருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023