NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக சட்டப்பேரவையில் பிளஸ்2 பொதுத்தேர்வினை எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000மாணவர்கள் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    இதுவரையில்லாத அளவிற்கு ஏன் இத்தனை மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என அனைத்து கட்சியினரும் தங்கள் கேள்விகளை முன்வைத்ததோடு,

    அதற்கான விளக்கத்தினை தமிழக அரசு அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வந்துவிடகூடாது என்பதில் தமிழகஅரசு உறுதியாக உள்ளது.

    பிளஸ்2 தேர்வு எழுதாத 47,943மாணவர்களுள் 40,593பேர் கடந்த வருடம் 11ம்வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    கொரோனா காலத்துக்குப்பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    கொரோனா காலகட்டத்தில் ஆல்-பாஸ்

    தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் அறிய தனி குழு அமைப்பு

    மேலும் பேசிய அவர், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு மீண்டும் வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதே போல் பொது தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து துணைத்தேர்வு எழுத வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

    இதற்கு ஆட்சியர்களின் ஒத்துழைப்பும், பிற துறைகளின் பங்களிப்பும் கட்டாயம் தேவை.

    தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.

    தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் துணைத்தேர்வு அவசியம் குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, 2020-21ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக பொது தேர்வு நடத்த முடியாத சூழலில் ஆல்-பாஸ் என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தான் தற்போது பிளஸ் 2 தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    சட்டமன்றம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அருணாச்சல பிரதேசம்
    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது இந்தியா
    அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது குறித்து பாஜக விளக்கம் அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025