NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை

    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தேனி மாவட்ட மலை பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய உலகம் முழுவதுமுள்ள மலையேற்றத்தை விரும்பும் மக்கள் ஆசைப்படுவர்.

    குறிப்பாக தேனி மாவட்ட போடிநாயக்கனூர் பகுதி குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் மற்றும் மலையேறும் பயிற்சிகளை மேற்கொள்வதை சுற்றுலாப்பயணிகள் வழக்கமாக வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2018ம்ஆண்டு மார்ச் மாதம் குரங்கணி மலைப்பகுதியிலிருந்து கொழுக்குமலை ஏற்றத்திற்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 39 பேர் அடங்கிய 2 குழுக்கள் சென்றது.

    இவர்கள் ஒத்தமரம் வழியாக செல்கையில், எதிர்பாராவிதமாக காட்டு தீ எரிய துவங்கியுள்ளது.

    இவர்கள் தீ பரவுவதற்குள் சென்று விடலாம் என அலட்சியமாக அதே பாதையில் சென்ற காரணத்தினால் காட்டு தீயில் சிக்கி தவித்தனர்.

    உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆளுக்கொரு திசையில் ஓடி பாறைகள், பள்ளங்களை தேடி ஓடியுள்ளார்கள்.

    கட்டுப்பாடுகள் விதிப்பு

    உலகையே உலுக்கிய குரங்கணி தீ விபத்து

    ஆனால் மலை முழுவதும் தீ பற்றியதால் எல்லா பகுதிகளிலும் கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 23 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியது.

    இந்த சம்பவம் நடந்து 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

    இதுகுறித்து குரங்கணி மக்கள் கூறுகையில், அப்பகுதிக்கு அன்று மலையேற சென்றவர்கள் தண்ணீர் போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டு கொழுக்குமலைக்கு செல்கிறோம் என்றுக்கூறி சென்றது இன்றும் எங்களால் மறக்க முடியவில்லை.

    தீயில் சிக்கியப்பிள்ளைகளை காப்பாற்ற நாங்கள் அங்குமிங்கும் ஓடியது இன்றும் நினைவில் உள்ளது.

    தீயில் சிக்கிய குழந்தைகள் போட்ட அலறல் சத்தம் இன்றும் மலைமுழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினர்.

    இந்த சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் அனுமதியில்லாமல் மலையேறக்கூடாது என்பது போன்ற பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மாவட்ட செய்திகள்

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை கனமழை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம் தமிழ்நாடு
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025