NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
    இந்தியா

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023, 07:23 pm 0 நிமிட வாசிப்பு
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை
    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை

    தேனி மாவட்ட மலை பகுதிகளில் ட்ரெக்கிங் செய்ய உலகம் முழுவதுமுள்ள மலையேற்றத்தை விரும்பும் மக்கள் ஆசைப்படுவர். குறிப்பாக தேனி மாவட்ட போடிநாயக்கனூர் பகுதி குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் மற்றும் மலையேறும் பயிற்சிகளை மேற்கொள்வதை சுற்றுலாப்பயணிகள் வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2018ம்ஆண்டு மார்ச் மாதம் குரங்கணி மலைப்பகுதியிலிருந்து கொழுக்குமலை ஏற்றத்திற்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 39 பேர் அடங்கிய 2 குழுக்கள் சென்றது. இவர்கள் ஒத்தமரம் வழியாக செல்கையில், எதிர்பாராவிதமாக காட்டு தீ எரிய துவங்கியுள்ளது. இவர்கள் தீ பரவுவதற்குள் சென்று விடலாம் என அலட்சியமாக அதே பாதையில் சென்ற காரணத்தினால் காட்டு தீயில் சிக்கி தவித்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆளுக்கொரு திசையில் ஓடி பாறைகள், பள்ளங்களை தேடி ஓடியுள்ளார்கள்.

    உலகையே உலுக்கிய குரங்கணி தீ விபத்து

    ஆனால் மலை முழுவதும் தீ பற்றியதால் எல்லா பகுதிகளிலும் கடும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியான சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதுகுறித்து குரங்கணி மக்கள் கூறுகையில், அப்பகுதிக்கு அன்று மலையேற சென்றவர்கள் தண்ணீர் போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டு கொழுக்குமலைக்கு செல்கிறோம் என்றுக்கூறி சென்றது இன்றும் எங்களால் மறக்க முடியவில்லை. தீயில் சிக்கியப்பிள்ளைகளை காப்பாற்ற நாங்கள் அங்குமிங்கும் ஓடியது இன்றும் நினைவில் உள்ளது. தீயில் சிக்கிய குழந்தைகள் போட்ட அலறல் சத்தம் இன்றும் மலைமுழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று கூறினர். இந்த சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் அனுமதியில்லாமல் மலையேறக்கூடாது என்பது போன்ற பலகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மாவட்ட செய்திகள்
    தேனி

    மாவட்ட செய்திகள்

    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் ராமநாதபுரம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விழுப்புரம்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி

    தேனி

    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்
    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023