NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுற்றலாத்தளங்களில் மக்கள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மெரினாவில் அதிகளவு கூட்டம் கூடும் என்பதால் அங்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதே போல், சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    குறிப்பாக மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படாமல் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

    ட்ரோன் கேமரா

    சிறப்பு வாகன தணிக்கை குழு அமைப்பு - வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

    இதே போல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக காவல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு, அதில் தற்காலிகமாக நான்கு காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புவாகன தணிக்கை குழு மற்றும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதோடு, கடற்கரைக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பொதுமக்களுக்காக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியன திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைதோறும் வண்டலூர் பூங்கா விடுமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025