NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    இந்தியா

    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 17, 2023, 11:25 am 1 நிமிட வாசிப்பு
    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றலாத்தளங்களில் மக்கள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் அதிகளவு கூட்டம் கூடும் என்பதால் அங்கு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல், சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. குறிப்பாக மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படாமல் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

    சிறப்பு வாகன தணிக்கை குழு அமைப்பு - வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

    இதே போல், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக காவல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு, அதில் தற்காலிகமாக நான்கு காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புவாகன தணிக்கை குழு மற்றும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதோடு, கடற்கரைக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்காக இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியன திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைதோறும் வண்டலூர் பூங்கா விடுமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவான பிளேயிங் 11 இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள் தமிழ் திரைப்படங்கள்
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைகிறீர்களா? உங்களுக்காகவே சில முக்கிய டிப்ஸ் உறவுகள்

    சென்னை

    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் பட்ஜெட் 2023
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு தமிழக காவல்துறை
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை

    பொங்கல் திருநாள்

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது மதுரை
    திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர் கூகுள்
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    பொங்கல் 2023 ஸ்பெஷல்: காணும் பொங்கல் பற்றி சில தகவல்கள் பொங்கல்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023