NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
    கரூர், மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15பேர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.,15) சென்றுள்ளனர்.

    போட்டியில் பங்கேற்ற பின்னர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியினை சுற்றிபார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் பெற்றபின்னர் காவிரியாற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

    அப்போது எதிர்பாரா விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் சூழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு சுமார் 1மணிநேரம் கழித்து 4 மாணவிகளின் உடல்களையும் மீட்டனர்.

    இதனையடுத்து, பலியான மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்திரண்டு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மறியல் போராட்டம்

    தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

    இதனையடுத்து இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.

    அப்போது கவனக்குறைவாக நடந்துகொண்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் போட்டுமணி உள்பட ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், சி.திலகவதி ஆகியோரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சாமி முத்தழகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் கரூர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே மாணவிகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்ததை கண்டித்து உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இலுப்பூரிலும் 2 மணிநேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    அவர்களோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    போராட்டம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ
    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு

    தமிழ்நாடு

    காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர் மாவட்ட செய்திகள்
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி மாவட்ட செய்திகள்
    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு சென்னை
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் ஆதார் புதுப்பிப்பு

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025