NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
    இந்தியா

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023, 10:53 am 0 நிமிட வாசிப்பு
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
    கரூர், மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

    புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15பேர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.,15) சென்றுள்ளனர். போட்டியில் பங்கேற்ற பின்னர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியினை சுற்றிபார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் பெற்றபின்னர் காவிரியாற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாரா விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் சூழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு சுமார் 1மணிநேரம் கழித்து 4 மாணவிகளின் உடல்களையும் மீட்டனர். இதனையடுத்து, பலியான மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்திரண்டு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

    இதனையடுத்து இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். அப்போது கவனக்குறைவாக நடந்துகொண்டதாக கூறி பள்ளி தலைமை ஆசிரியர் போட்டுமணி உள்பட ஆசிரியர்கள் ஜெபசகேயு எப்ராகிம், சி.திலகவதி ஆகியோரை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சாமி முத்தழகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர் கரூர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே மாணவிகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்ததை கண்டித்து உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இலுப்பூரிலும் 2 மணிநேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவர்களோடு காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    காவல்துறை
    போராட்டம்
    காவல்துறை

    தமிழ்நாடு

    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு விழுப்புரம்
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு ஆதார் புதுப்பிப்பு
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    துணி துவைத்ததற்காக ராணுவ வீரர் ஒருவரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர் திமுக

    காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கர்நாடகா
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா

    போராட்டம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா
    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது தமிழ்நாடு

    காவல்துறை

    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' மத்திய பிரதேசம்
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி
    தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி தமிழ்நாடு
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023