NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
    இந்தியா

    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்

    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023, 06:40 pm 0 நிமிட வாசிப்பு
    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்

    தமிழகம் முழுவதும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான இந்த பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாட வருடந்தொறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன் படி, இந்தாண்டு ஆட்சியில் உள்ள திமுக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெள்ளம், 1 முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூ, 1000 பணத்தினை ரேஷன் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்து தந்தது. அதன்படி, தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கப்பட்டது. தற்கான மொத்த தொகை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் 4,39,699 பேர் பொங்கல் பரிசு தொகையினை வாங்கவில்லை

    இந்த பணத்தினை ஏராளமான மக்கள் வாங்கி சென்றனர். எனினும், இவர்களுள் சில மக்கள் அந்த ரூ.1000 பணத்தினை வேண்டாம் என்றுகூறி வாங்க மறுத்து சென்றுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 15லட்சத்து 88ஆயிரத்து 937குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் பணம் வழங்க அதற்கான தொகை ரேஷன்கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 15லட்சத்து 60ஆயிரத்து 503பேர் பணம் வாங்கியுள்ளனர், மீதி பேர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 699 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பவந்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்த தொகையினை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்திவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பொங்கல் பரிசு

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் மாவட்ட செய்திகள்
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? இந்தியா
    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? வைரல் செய்தி
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    பொங்கல் பரிசு

    நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை தமிழ்நாடு
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின மதுரை
    பொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல் இந்தியா
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023