NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்
    பொங்கல் பரிசுத் தொகுப்பு

    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள்

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2022
    03:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு 2022ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அது அனைத்தும் பொது மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    ரொக்க பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் தரவில்லை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டே ரொக்கப்பணம் தரப்படவில்லை என்று ஆளுங்கட்சியினர் விளக்கம் அளித்தாலும், இது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக அமைந்தது.

    இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தமிழக முதல்வர் உணவுத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அமைச்சரான துரைமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க கோரிக்கை

    ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

    இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தாண்டு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை மட்டும் பரிசு பொருள் தொகுப்பு பையில் கொடுக்கப்படும் என்றும்,

    ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதிக பொருட்கள் தருவதால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்கவே இம்முறை பொருட்கள் குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, பொங்கல் பண்டிகை என்றாலே, அதில் சர்க்கரை பொங்கலும், கரும்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்கிற பட்சத்தில், விவசாயிகளிடம் இருந்து கரும்பினை உடனடியாக கொள்முதல் செய்து அதனை பரிசு பொருள் தொகுப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025