NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    April 18, 2023 | 03:05 pm
    April 18, 2023 | 03:05 pm
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்
    சூடானில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புல்லட் காயத்தால் உயிரிழந்தார்.

    சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டின் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் 200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,800 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(KSDMA), இது குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. "கர்நாடகாவைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழு சூடானில் சிக்கித் தவிப்பதாக எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குழுவை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்." என்று KSDMA கமிஷனர் டாக்டர் மனோஜ் ராஜன் கூறியுள்ளார்.

    2/2

    கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல் 

    "தற்போது அங்கு சிக்கித் தவிக்கும் மக்கள் எங்கிருந்தாலும் அதே இடத்தில் தங்கியிருக்க வேண்டும், வெளியே செல்ல வேண்டாம். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை சரி செய்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது." என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடானில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புல்லட் காயத்தால் உயிரிழந்தார். சூடானில் வன்முறை வெடித்த உடனேயே, இந்தியர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் வலியுறுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கர்நாடகா
    வெளியுறவுத்துறை

    இந்தியா

    மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!  கோலிவுட்
    ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?  ஆப்பிள்
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  மாவட்ட செய்திகள்
    இந்தியாவில் ஒரே நாளில் 7,633 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா

    கர்நாடகா

    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் இந்தியா
    கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார் இந்தியா
    ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு  தமிழ்நாடு
    சுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்? பசவராஜ் பொம்மை

    வெளியுறவுத்துறை

    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கை
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியா
    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023