NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்
    சூடானில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புல்லட் காயத்தால் உயிரிழந்தார்.

    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சூடான் நாட்டின் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் 200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,800 பேர் காயமடைந்தனர்.

    கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(KSDMA), இது குறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    "கர்நாடகாவைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழு சூடானில் சிக்கித் தவிப்பதாக எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு குழுவை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்." என்று KSDMA கமிஷனர் டாக்டர் மனோஜ் ராஜன் கூறியுள்ளார்.

    details

    கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல் 

    "தற்போது அங்கு சிக்கித் தவிக்கும் மக்கள் எங்கிருந்தாலும் அதே இடத்தில் தங்கியிருக்க வேண்டும், வெளியே செல்ல வேண்டாம். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தை சரி செய்வதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது." என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சூடானில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புல்லட் காயத்தால் உயிரிழந்தார்.

    சூடானில் வன்முறை வெடித்த உடனேயே, இந்தியர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் வலியுறுத்தியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கர்நாடகா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்தியா

    8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர்  ஜம்மு காஷ்மீர்
    2023ஆம் ஆண்டு சாதாரண பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    கர்நாடகா

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் பெங்களூர்
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் காவல்துறை
    கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தமிழ்நாடு
    பாலாறு வழியாக கர்நாடகா தமிழகம் இடையேயான போக்குவரத்து நிறுத்தம் தமிழ்நாடு

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025