NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
    சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 31, 2023
    09:19 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

    இந்த உயர்வு ரூ.5 முதல், ரூ.65 வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

    அதன்படியே தற்போது கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில், 29 சுங்கச்சாவடிகளில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.5 - 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    card 2

    பொதுமக்கள் அதிருப்தி

    தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் 29 சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது.

    இந்த உத்தரவின்படி, 4-சக்கர வாகனங்களுக்கு ஒருமுறைக்கான கட்டணம் ரூ.85-ல்இருந்து ரூ.90, இருமுறை கட்டணம் ரூ.125-ல்இருந்து ரூ.135 என்றும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.145-லிருந்து ரூ.160, இருமுறை கட்டணம் ரூ.220-லிருந்து ரூ.240 என்றும், கனரக வாகனங்களில் லாரி, பேருந்துக்கு ரூ.290-ல் இருந்து ரூ.320, இருமுறைக்கு ரூ.440-ல்இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.

    இந்த விலையுயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    காரணம், ஒரு சில சாலைகளில், சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், வசூலிக்கப்படும் கட்டணங்களுக்குரிய சேவை வழங்கபட வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வாகனம்

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    தமிழ்நாடு

    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  பெட்ரோல்
    அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலை  அமெரிக்கா
    முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது  மு.க ஸ்டாலின்
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    வாகனம்

    இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் விலை உயர்வு - ஏப்ரல் 1 முதல் அமல்! கார்
    இது கார் இல்லை வீடா? ஹூண்டாய் வெர்னா காரின் சிறப்புகள்! ஹூண்டாய்
    சூப்பர் மாடல் பைக்கை அறிமுகப்படுத்திய கவாஸாகி நிறுவனம்! பைக் நிறுவனங்கள்
    ஒரு கார் கூட விற்பனை செய்யமுடியாமல் திணறிய நிறுவனங்கள்! கார் உரிமையாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025