NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
    இந்தியா

    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    August 31, 2023 | 09:19 am 1 நிமிட வாசிப்பு
    25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
    சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

    இன்று நள்ளிரவு முதல், தமிழ்நாட்டில் இருக்கும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இந்த உயர்வு ரூ.5 முதல், ரூ.65 வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படியே தற்போது கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 816 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.470 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 54-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் நடைமுறையில் உள்ளன. இவற்றில், 29 சுங்கச்சாவடிகளில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.5 - 55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்கள் அதிருப்தி

    தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளில் 29 சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகிறது. இந்த உத்தரவின்படி, 4-சக்கர வாகனங்களுக்கு ஒருமுறைக்கான கட்டணம் ரூ.85-ல்இருந்து ரூ.90, இருமுறை கட்டணம் ரூ.125-ல்இருந்து ரூ.135 என்றும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.145-லிருந்து ரூ.160, இருமுறை கட்டணம் ரூ.220-லிருந்து ரூ.240 என்றும், கனரக வாகனங்களில் லாரி, பேருந்துக்கு ரூ.290-ல் இருந்து ரூ.320, இருமுறைக்கு ரூ.440-ல்இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. இந்த விலையுயர்வு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஒரு சில சாலைகளில், சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், வசூலிக்கப்படும் கட்டணங்களுக்குரிய சேவை வழங்கபட வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    வாகனம்

    தமிழ்நாடு

    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை இந்தியா
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல் செந்தில் பாலாஜி
    வேளாங்கண்ணி மாதா தேவாலய பெருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது திருவிழா
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு கர்நாடகா

    வாகனம்

    ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம் கார்
    பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு தமிழ்நாடு
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! போக்குவரத்து காவல்துறை
    FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள் கார்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023