NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்
    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்
    இந்தியா

    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்

    எழுதியவர் Nivetha P
    March 10, 2023 | 04:44 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்
    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள்

    சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஒவ்வொரு முகாம் அமைக்கப்பட்டது. அதில் ஒரு மருத்துவர், மருந்தாளுனர், நர்சு, உதவியாளர் ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டு அங்கு வரும் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காலை 9 மணியளவில் துவங்கிய இந்த முகாமில் காய்ச்சல், இருமல், சளி, ரத்த சோகை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் சாமியானா, பந்தல் ஆகியன போடப்பட்டு இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் குறித்த விழிப்புணர்வினை அந்தந்த பகுதி மக்களுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் ஏற்படுத்தினர்.

    தொடர் காய்ச்சல் பாதிப்பு உள்ளோருக்கு ரத்த பரிசோதனை

    வைரஸ் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முகாம் நடப்பது குறித்து அறிந்ததும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து சிகிச்சை பெற்றனர். இதனால் முகாம்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர் காய்ச்சல் பாதிப்பு உள்ளோருக்கு ரத்த பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற வந்தவர்களிடன் மருந்து மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சுடுநீர் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முகாம்களில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சத்து மாத்திரைகளும், சிரப்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    சுகாதாரத் துறை

    சென்னை

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம் இந்தியா
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு
    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் கேரளா

    சுகாதாரத் துறை

    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023