NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

    இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

    அந்த தகவலின்படி, ராமேஸ்வர தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி, துறைமுக போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

    அப்போது சேரான் கோட்டைக்கும் புலித்தேநகருக்கும் இடையில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டையினை அவர்கள் கண்டெடுத்து பிரித்து பார்த்துள்ளனர்.

    அதில் ஒரு பார்சலுக்கு 2 கிலோ வீதம் 10 பார்சல்கள் என மொத்தம் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

    தீவிர விசாரணை

    இலங்கைக்கு கடத்த முயற்சி ?

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த பார்சல்களை கைப்பற்றி துறைமுக காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்னதாக நேற்று முன்தினம் துறைமுக கடற்கரையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த கஞ்சாக்கள் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

    படகில் ஏற்ற வைக்கப்பட்டிருந்த நிலையில் போலீசாரை கண்டதும் அந்த கஞ்சா பார்சல்களை கடலில் வீசிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடி இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமேஸ்வரம்
    இலங்கை
    கடற்கரை

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    ராமேஸ்வரம்

    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் இந்தியா
    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025