NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
    இந்தியா

    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
    எழுதியவர் Nivetha P
    Mar 11, 2023, 11:57 am 1 நிமிட வாசிப்பு
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்
    ராமேஸ்வர கடற்கரையில் பொட்டலமாக கரை ஒதுங்கிய 20 கிலோ கஞ்சா பறிமுதல்

    ராமேஸ்வரம் சேரான்கோட்டை அருகே உள்ள கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள். அந்த தகவலின்படி, ராமேஸ்வர தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி, துறைமுக போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரத்னவேல் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது சேரான் கோட்டைக்கும் புலித்தேநகருக்கும் இடையில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டையினை அவர்கள் கண்டெடுத்து பிரித்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பார்சலுக்கு 2 கிலோ வீதம் 10 பார்சல்கள் என மொத்தம் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

    இலங்கைக்கு கடத்த முயற்சி ?

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த பார்சல்களை கைப்பற்றி துறைமுக காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக நேற்று முன்தினம் துறைமுக கடற்கரையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த கஞ்சாக்கள் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம். படகில் ஏற்ற வைக்கப்பட்டிருந்த நிலையில் போலீசாரை கண்டதும் அந்த கஞ்சா பார்சல்களை கடலில் வீசிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடி இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    கடற்கரை
    இலங்கை
    ராமேஸ்வரம்

    கடற்கரை

    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு - போலீஸ் மறுப்பு திருச்செந்தூர்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  பயணம்

    இலங்கை

    இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு காரணம் இந்தியா - இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா
    இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம் இந்தியா
    கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம் ராமேஸ்வரம்
    கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,408 பேர் பங்கேற்பு யாழ்ப்பாணம்

    ராமேஸ்வரம்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் கடற்படை
    ராமேஸ்வரம் அருகே வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக தகவல் - நிபுணர்கள் சோதனை  கடற்கரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023