NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!
    3 வருடங்கள் அறையை விட்டு வெளியே வராத தாய் மற்றும் மகள்(படம்: News 18 Tamilnadu)

    கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.

    தற்போது காவலர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    2020ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா அதிகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இதனையடுத்து ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் போடபட்டன.

    பலர் கொரோனாவைக் கண்டு பயந்தாலும் ஊரடங்கு முடிந்ததும் எல்லோரும் தடுப்பூசிகளைப் போட்டு கொண்டு அவரவர் வாழ்க்கையைப் பார்க்க சென்றுவிட்டனர்.

    ஆனால், இந்த கொரோனா பயத்தினால் ஆந்திராவை சேர்ந்த இருவர் அறையை விட்டு கூட வெளியே வராமல் 3வருடங்கள் அறைக்குள்ளேயே இருந்திருக்கின்றனர்.

    தாய் மணி, மகள் துர்கா மற்றும் தந்தை சுரி பாபு ஆகியோர் காகிநாடாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.

    23 Dec 2022

    தாய் மற்றும் மகள் மீட்பு!

    3 வருடங்களாக யாரையுமே சந்திக்காமல் சூரியவெளிச்சத்தை கூட பார்க்காமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்த தாய் மற்றும் மகளை, சுரி பாபு வெளியே அழைத்து வர எவ்வளோவோ முயற்சி செய்துள்ளார்.

    ஆனால், அது நடக்கவே இல்லை. ஒவ்வொரு முறை இதைப் பற்றி பேச நெருங்கும் போதெல்லாம் தாயும் மகளும் கூச்சலிட்டு சுரி பாபுவை விரட்டி அடித்துள்ளனர்.

    இதனால் வேறு வழி இல்லாமல் சுரி பாபு இதைப் பற்றி போலீஸில் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து, கடந்த செய்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவர்களது வீட்டிற்குள் நுழைந்த காவலர்கள் இரு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இவர்களுக்கு உடல் ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும் இவர்களது மனநலனைப் பரிசோதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கோவிட்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! உலகம்
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! வைரஸ்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் உலக செய்திகள்

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025