LOADING...
சினிமா ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் ஜாக்பாட்; 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் அரசாணை
ஒரு வாரத்திற்கு திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் அனுமதி

சினிமா ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் ஜாக்பாட்; 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் அரசாணை

எழுதியவர் Venkatalakshmi V
May 25, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையினைப் பரிசீலித்து, திரையரங்கு விதிகளில் மிக முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு தமிழக முதலமைச்சர் விஜய் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இனி குறிப்பிட்ட நாட்களில் தினசரி 5 காட்சிகள் (5 Shows) திரையிட அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்படி, புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் வரை திரையிடலாம். வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு), அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகை/விடுமுறை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு முறையும் தனியாக எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை என விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement