NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி: இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி: இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு
    ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி!

    ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி: இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 03, 2024
    07:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு இனி அவரே இசையமைப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். "இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    சூது கவ்வும் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது மேடையில் பேசிய சந்தோஷ் நாராயணன், " 'அட்டக்கத்தி' படம் உருவாகும்போது, 'எனக்கு உன் மியூசிக் பிடிக்கல' என்று பா.ரஞ்சித் கூறினார். அதன்பிறகு கிராமிய இசை மீது கவனம் செலுத்த சொன்னார். என்னை உருவாக்கியதில் பா.ரஞ்சித்துக்கு பங்கு உண்டு" என்று கூறினார்.

    உறுதி

    மனக்கசப்புகள் மறந்து மீண்டும் இணையும் சூப்பர் கூட்டணி

    சந்தோஷ் நாராயணன் மற்றும் பா.ரஞ்சித் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில காலம் பணியாற்றாமல் இருந்த நிலையில், இப்போது சந்தோஷ் நாராயணின் இந்த அறிவிப்பை வெளியிட்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    'சூது கவ்வும்', 'கடைசி விவசாயி' ஆகிய இரண்டு படங்களையும் நான் எப்போது பார்க்க ஆரம்பித்தாலும் முழுமையாக பார்த்துவிடுவேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள். நலனை பிடித்து வைத்திருக்கிறேன். அவரது அடுத்த படத்துக்கு நான் இசையமைப்பேன் என்று கூறிவிட்டேன். அதேபோல, பா.ரஞ்சித்தின் இனிவரும் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை" என தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பா ரஞ்சித்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பா ரஞ்சித்

    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் விக்ரம்
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு தமிழ்நாடு
    சிறிய பட்ஜெட் படங்களை விற்பதில் ஓடிடி-யிலும் பிரச்னை: பா. ரஞ்சித் வருத்தம் ஓடிடி
    'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன் கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025