விஜய் சேதுபதியின் 50வது திரைப்பட டைட்டில் வெளியானது
சினிமாவுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், படத்திற்கு படம் வெவ்வேறு பரிமாணங்களை தனது நடிப்பிலும், உருவமாற்றத்திலும் வெளிப்படுத்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'குரங்கு பொம்மை' படத்தினை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இப்படத்தினை இயக்குகிறார், 'காந்தாரா'புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ள நிலையில், இதனை தயாரிக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் தி ரூட் நிறுவனமும் இணைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுராக் காஷ்யப், நட்டி நடராஜன், அருள்தாஸ், முனீஸ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் சற்றுமுன்னர் இணையத்தில் போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்சேதுபதியின் 50வது திரைப்படத்திற்கு'மகாராஜா'என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.