பாகுபலியில் நடந்த மாற்றம்: ஸ்ரீதேவிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்!
இந்த ஆண்டின் ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பு பட்டியலில் இடம்பெற்று, இறுதி போட்டி வரை சென்ற திரைப்படம் RRR. அந்த திரைப்படத்திற்கு முன்னோடியாக இருந்த படம் தான் 'பாகுபலி'. ராஜமௌலி இயக்கி இருந்த அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இரண்டுமே பிரமாண்ட வெற்றி அடைந்தது. இந்த திரைப்படம் ஒரு சரித்திர புனைவு கதையாக எடுக்கப்பட்டது. அதில் பாகுபலியாக பிரபாஸும், பல்வாள் தேவனாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும் நடித்திருந்தனர். இருப்பினும், ராஜமாதா சிவகாமியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஆனால் அந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியாம். அவரின் கணவர் போனி கபூர் பல கண்டிஷன்கள் போட்டதால், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணனை புக் செய்தார்களாம்.