NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்
    அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகம் ஆனவர் யுவா ராஜ்குமார்

    கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 11, 2024
    06:56 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் சகோதரர் மகன் யுவா ராஜ்குமாரும் ஒரு வளர்ந்துவரும் நடிகர் ஆவர்.

    அவர் சக நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி பகீர் குற்றசாட்டை வைத்துள்ளார்.

    இது ராஜ்குமாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் ரசிகர் ராஜ்குமாருக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.

    அவரின் மகன்களான சிவராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமாருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம்.

    அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகம் ஆனவர் யுவா ராஜ்குமார். இவருக்கும் இவரின் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

    யுவா ராஜ்குமார், ஸ்ரீதேவி வைரப்பாவை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    விவாகரத்து 

    7 வருட காதல் விவகாரத்தில் முடிகிறது

    திருமணமாகி 5 வருடங்களே ஆகும் நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர் இருவரும்.

    ஒருபுறம் யுவா, மனைவி ஸ்ரீதேவி, தன்னை தன் பெற்றோரிடமிருந்து பிரிக்க முயன்றதாகவும், தன்னுடைய பணத்திற்கு ஆசை பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியதோடு, பல வகையில் தன்னை கொடுமை படுத்தியதாக விவாகரத்து மனுவில் கூறியுள்ளார்.

    மறுபுறம் ஸ்ரீதேவியோ, யுவாவை தான் கொடுமைப்படுத்தவில்லை. அவரால் தான், தான் மனதளவிலும் உடலளவிலும் அதிகம் காயப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், யுவா தன்னுடன் இணைந்து நடித்த நடிகை உடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். கையும் களவுமாக இருவரையும் ஒரு ஹோட்டல் அறையில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை, காந்தாரா படத்தில் நடித்திருந்த சப்தமி கவுடா ஆவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னட படங்கள்

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது நடிகர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025