Page Loader
கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்
அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகம் ஆனவர் யுவா ராஜ்குமார்

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் வீட்டில் வீசும் புயல்; கள்ளத்தொடர்பு என மருமகள் புகார்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2024
06:56 pm

செய்தி முன்னோட்டம்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் சகோதரர் மகன் யுவா ராஜ்குமாரும் ஒரு வளர்ந்துவரும் நடிகர் ஆவர். அவர் சக நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி பகீர் குற்றசாட்டை வைத்துள்ளார். இது ராஜ்குமாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழம்பெரும் ரசிகர் ராஜ்குமாருக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் மகன்களான சிவராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமாருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம். அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகம் ஆனவர் யுவா ராஜ்குமார். இவருக்கும் இவரின் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். யுவா ராஜ்குமார், ஸ்ரீதேவி வைரப்பாவை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து 

7 வருட காதல் விவகாரத்தில் முடிகிறது

திருமணமாகி 5 வருடங்களே ஆகும் நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர் இருவரும். ஒருபுறம் யுவா, மனைவி ஸ்ரீதேவி, தன்னை தன் பெற்றோரிடமிருந்து பிரிக்க முயன்றதாகவும், தன்னுடைய பணத்திற்கு ஆசை பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியதோடு, பல வகையில் தன்னை கொடுமை படுத்தியதாக விவாகரத்து மனுவில் கூறியுள்ளார். மறுபுறம் ஸ்ரீதேவியோ, யுவாவை தான் கொடுமைப்படுத்தவில்லை. அவரால் தான், தான் மனதளவிலும் உடலளவிலும் அதிகம் காயப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், யுவா தன்னுடன் இணைந்து நடித்த நடிகை உடன் கள்ளத்தொடர்பில் உள்ளார். கையும் களவுமாக இருவரையும் ஒரு ஹோட்டல் அறையில் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை, காந்தாரா படத்தில் நடித்திருந்த சப்தமி கவுடா ஆவார்.