LOADING...
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்? அவரே கொடுத்த விளக்கம்
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டதாக பரவும் செய்தியின் உண்மைத்தன்மை

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்? அவரே கொடுத்த விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2026
02:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகரும், அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜை உடனடியாகக் கைது செய்யப் பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இந்நிலையில், இந்த தகவல்கள் குறித்து பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பரவும் செய்தி குறித்த பின்னணியையும், பிரகாஷ் ராஜின் பதிவு குறித்துமான கூடுதல் தகவல்கள் இங்கே:-

வாக்காளர் அடையாள அட்டை

4 மாநில வாக்காளர் அடையாள அட்டை விவகாரமும் பின்னணியும்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மத்திய தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுப் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார். அந்தச் சமயத்தில், பெங்களூருவைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் பிரகாஷ் ராஜுக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்திலும், காவல் நிலையத்திலும் ஒரு புகாரை அளித்தார். அதில், பிரகாஷ் ராஜ் சட்டவிரோதமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே பெயரில் 4 வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்துள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

நீதிமன்ற நடவடிக்கை

நீதிமன்ற சம்மனும் பிடிவாரண்ட் செய்தியும்

இந்த விவகாரம் தொடர்பாகப் பெங்களூரு 48வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தின் தரப்பில் இருந்து இரண்டு முறை பிரகாஷ் ராஜுக்குச் சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே, நீதிமன்றம் அவர் மீது கடுமையான ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவின.

Advertisement

விளக்கம்

நடிகர் பிரகாஷ் ராஜ் கொடுத்துள்ள விளக்கம்

தமக்கு எதிராக ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பரவி வரும் செய்திகளை நடிகர் பிரகாஷ் ராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பான செய்தியைத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான போலிச் செய்திகளைத் தயாரித்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை எப்போதும் ஏதோ ஒரு வேலையில் மும்முரமாக வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என நையாண்டியாகப் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement