LOADING...
கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்தேன்; நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி
கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்ததாக நடிகர் அஜித் நெகிழ்ச்சி

கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்தேன்; நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 29, 2025
12:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார், தான் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்றபோது, தனது தனிப்பட்ட ஆர்வத்திற்காகக் குடும்பத்துடன் செலவிடும் முக்கியமான நேரத்தைத் தியாகம் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது மனைவி ஷாலினி அளித்த அசைக்க முடியாத ஆதரவு மற்றும் தொழில்முறைப் பந்தய வீரராக இருப்பதற்கான சவால்கள் குறித்து மனம் திறந்து பேசினார். பந்தய உலகில் தான் பயணித்த காலகட்டத்தை நினைவு கூர்ந்த அஜித், "பந்தயம் என்பது அதிக அர்ப்பணிப்பையும், நேரத்தையும் கோரும் ஒரு விளையாட்டு. இதன் காரணமாக, எனது குழந்தைகள் என்னைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருந்தது. நான் பெரும்பாலான நேரங்களில் பயணத்திலோ அல்லது பயிற்சி மையங்களிலோதான் இருந்தேன்." என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மனைவி

மனைவி ஷாலியின் ஆதரவு

இருப்பினும், அவரது மனைவி ஷாலினி, அவரது கனவுகளுக்கும் ஆர்வத்திற்கும் அளித்த முழுமையான ஆதரவு, இந்தப் பயணத்தை எளிதாக்கியதாக அவர் குறிப்பிட்டார். ஷாலினி தன் மீது வைத்திருந்த அசாத்திய நம்பிக்கை மற்றும் புரிதல் காரணமாகத்தான் அவரால் தனது ஆர்வத்தைத் தொடர முடிந்தது என்றும், குடும்பத்தின் இந்தப் புரிதல் ஒரு பந்தய வீரருக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம் என்றும் அஜித் குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திரைப்படத் துறைக்கு வெளியே நடிகர் அஜித் குமார் கொண்டிருக்கும் இந்த மோட்டார்ஸ்போர்ட் ஆர்வம், அவரது ரசிகர்களுக்கு மத்தியில் எப்போதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.