செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
கோலிவுட்டில், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் வெகுசில நடிகர்களில், விமலும் ஒருவர். அவரது படங்கள் பெரிதாக ஓடாத போது, 'மன்னர் வகையறா' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, கோபி என்பவரிடம், 4.5 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், அந்த கடனை திருப்பி தராமல், மோசடி செக் வழங்கியதாகவும், விமல் பெயரில் ஒரு மோசடி கேஸ், கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், குறுக்கு விசாரணைக்கு விமல் தரப்பில் யாரும் ஆஜர் ஆகவில்லை. ஆனால், மறுவிசாரணைக்கு மட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தோடு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என்று நீதிபதி அந்த மனுவை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக 300 ரூபாய் அபராதமும் விதித்தார்.