Page Loader
மெய்யழகன் பட  ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழில் பேசி அசத்திய நடிகர் கார்த்தி
மெய்யழகன் பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழில் பேசி அசத்திய நடிகர் கார்த்தி

மெய்யழகன் பட  ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழில் பேசி அசத்திய நடிகர் கார்த்தி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2024
10:03 am

செய்தி முன்னோட்டம்

மெய்யழகன் பட ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி தஞ்சாவூர் தமிழில் பேசிய காணொளி வைரலாகி வருகிறது. மிகப்பெரிய ஹிட் அடித்த 96 பட இயக்குனரான பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 27ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், சமீபத்தில் கடத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா மற்றும் இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பேச்சு

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, 96ஐ முடித்துவிட்டு இயக்குனர் பிரேம்குமார் தனக்காக ஒரு கதை எழுதிவிட்டு அதை தன்னிடம் பேச தயங்குவதாக கேள்விப்பட்டதும், தானே அவரை நேரில் அழைத்து பேசி இந்த படத்தைத் தொடங்கியதாக கூறினார். மேலும், கைதிக்குப் பிறகு தனது வாழ்க்கையில் அதிக நேரம் இரவில் படமாக்கப்பட்ட படம் இதுதான் எனக் குறிப்பிட்ட கார்த்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிற இரண்டு பேர் பேசுகிற விஷயத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தில் வரும் பாடலை பாடியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி, படத்தில் தான் பேசும் தஞ்சாவூர் தமிழில் சில வசனங்களையும் பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் கார்த்தி பேசும் காணொளி