
புத்தாண்டை ஒட்டி ஸோமாட்டோவில் குவிந்த ஆர்டர்கள்
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு ஆண்டும் முக்கியத் தருணங்கள் மற்றும் விழாக்காலங்களின் போது, வெளி உணவகங்களில் இருந்து உணவுகளை மக்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது.
அதனை பறைசாற்றும் வகையில் இந்த புத்தாண்டை முன்னணிட்டு ஸோமாட்டோவில் அதிகளவில் ஆர்டர்கள் குவிந்து வருவதாகக் கூறி எக்ஸில் பதிவிட்டிருக்கிறார் ஸோமாட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல்.
அந்தப் பதிவில் 2015, 16, 17,. 18, 19 மற்றும் 2020 ஆகிய ஆண்டு புத்தாண்டுகளில் ஆர்டர் செய்யப்பட்ட அளவுகளை மொத்தமாக சேர்த்து நேற்று ஒரு நாளில் மட்டும் ஆர்டர்கள் குவிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
மேலும், டெலிவரி பார்ட்னர்களுக்கான டிப்ஸாக மட்டும் நேற்று இரவு வரை 97 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
ட்விட்டர் அஞ்சல்
ஸோமாட்டோ சிஇஓவின் எக்ஸ் பதிவு:
Fun fact: We’ve delivered almost as many orders on NYE 23 as we did on NYE 15, 16, 17, 18, 19, 20 combined 🤯
— Deepinder Goyal (@deepigoyal) December 31, 2023
Excited about the future!