NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ?
    வணிகர்களின் பயன்பாட்டிற்காக பேடிஎம் அறிமுகப்படுத்திய சவுண்டு பாக்ஸ்

    பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 25, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் கட்டணங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிக்கும் வகையில் சவுண்டு பாக்ஸ் என்ற சாதனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பேடிஎம்.

    தொழில்நுட்பத்தில் அளவில் விழிப்புணர்வு இல்லாத, இந்திய சிறு மற்றும் குறு வணிகர்களுக்கும் இந்த சாதனம் யுபிஐ பயன்பாட்டை எளிமையாகவும், நம்பகத்தன்மையுடையதாகவும் மாற்றியது.

    பேடிஎம்மைத் தொடர்ந்து, போன்பே, அமேசான் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும், சவுண்டு பாக்ஸ்களை வணிகர்களுக்கு வழங்கத் தொடங்கினர். தற்போது அந்த வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது ஜியோ.

    கடந்த ஜூலை மாதம், ரிலையன்ஸ் முதலீட்டு நிறுவனத்திலிருந்து தனி நிறுவனமாகப் பிரிந்தது ஜியோ நிதிச் சேவைகள் நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் கீழ் எந்த வகையான சேவைகளும் அளிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    ஜியோ

    சவுண்டு பாக்ஸை சோதனை செய்து வரும் ஜியோ: 

    சவுண்டு பாக்ஸ்களை வழங்குவதற்கு வணிகர்களிடமிருந்து மாதாந்திர முறையில் அதனை வழங்கும் நிறுவனங்கள் சிறு கட்டணத்தைப் பெறுகின்றன.

    ஆனால், அதனைக் கடந்து ஒரு வணிகர் அல்லது வணிகம் குறித்த பல்வேறு விதமான தகவல்களை இந்த சவுண்டு பாக்ஸ்களால் பேடிஎம், போன்பே ஆகிய நிறுவனங்கள் பெற முடியும்.

    இந்தத் தகவல்களைக் கொண்டு, தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எப்படி சேவை வழங்கலாம் என்பது குறித்த திட்டங்களையும் அந்நிறுவனங்களால் வகுக்க முடியும்.

    விரைவில் நிதிச் சேவைகளை வழங்கவிருக்கும் ஜியோ, இதனை மனதில் கொண்ட புதிய சவுண்டு பாக்ஸை தங்கள் கிளை நிறுவனங்கள் மூலம் சோதனை செய்து வருகிறது. எப்போதும், ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கிளை நிறுவனங்கள் மூலம் அதனை சோதனை செய்வது ஜியோவின் வழக்கம்.

    ஜியோ

    என்னென்ன சேவைகளை வழங்கவிருக்கிறது ஜியோ நிதிச் சேவைகள் நிறுவனம்? 

    சவுண்டு பாக்ஸை ஜியோ சோதனை செய்து வந்தாலும், அதனை எப்போது பொதுப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தும் அல்லது அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    புதிய ஜியோ நிதிச் சேவைகள் நிறுவனத்தின் மூலமாக, பல்வேறு நிதிச் சேவைகளை விரைவில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

    வணிகத்திற்காக கடன் வழங்குவது, தனிநபர்க் கடன், கடைகளை விரிவுபடுத்துவதற்கான கடன்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பற்ற வணிகக் கடன்கள் வழங்குதல் ஆகிய நிதிச் சேவைகளை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    வணிக ரீதியிலான நிதிச் சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டிருக்கும் நிலையில், சவுண்டு பாக்ஸின் அறிமுகம் அந்நிறுவனத்தின் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமான தேவையாகிறது. எனவே, விரைவில் ஜியோ அதனை அறிமுகப்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    யுபிஐ
    வணிகம்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    ஜியோ

    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? இந்தியா
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் தொழில்நுட்பம்
    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும் தொழில்நுட்பம்
    ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - என்னென்ன பலன்கள் இந்தியா

    யுபிஐ

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! இந்தியா
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் பிரான்ஸ்

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 7 தங்கம் வெள்ளி விலை
    அலுவலகத்திலிருந்து வேலை பார்ப்பதன் அவசியத்தை குறிப்பிடும் ஆய்வறிக்கை உலகம்
    டெஸ்லாவின் புதிய CFO-வாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தானேஜா டெஸ்லா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 8 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025