
அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய 2033க்குள் யுரேனியம் இறக்குமதியை நான்கு மடங்கு அதிகரிக்க இந்தியா திட்டம்
செய்தி முன்னோட்டம்
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, இந்தியா 2033 ஆம் ஆண்டுக்குள் யுரேனிய இறக்குமதியை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மொத்தம் 9,000 மெட்ரிக் டன்களை இறக்குமதி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கம் அரசாங்கத்தின் ₹20,000 கோடி தேசிய அணுசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது நாடு முழுவதும் அதிகரித்து வரும் அணு உலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4.25 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு யுரேனிய இருப்பு இருந்தபோதிலும், மோசமான தாது தரம் மற்றும் அதிக சுரங்க செலவுகள் போன்ற சவால்கள் இந்தியா சர்வதேச சப்ளையர்களை அதிகம் நம்பியிருக்க வேண்டிய சூழலில் தள்ளியுள்ளது.
இறக்குமதி
இறக்குமதி விபரங்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா ₹2,090 கோடி செலவில் சுமார் 2,600 மெட்ரிக் டன் யுரேனியத்தை இறக்குமதி செய்தது.
எதிர்கால இறக்குமதிகள் ரஷ்யா, கனடா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஒருவேளை ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தற்போதைய அணு மின் உற்பத்தி திறன் 8.88 GW ஆக உள்ளது, மேலும் 2031-32 ஆம் ஆண்டுக்குள் 22.48 GW ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2047 ஆம் ஆண்டுக்குள் 100 GW ஐ அடைய வேண்டும் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் இந்தியா கொண்டுள்ளது.
இந்த லட்சிய இலக்கு இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) மற்றும் NTPC லிமிடெட் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தொடரப்படும்.