Page Loader
பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பலமடங்கு உயர்வு
பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி உயர்வு

பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பலமடங்கு உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 04, 2024
04:16 pm

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய ஜவுளி விநியோக மையமாக விளங்கும் அண்டை நாடான பங்களாதேஷின் அரசியல் கொந்தளிப்பால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், இந்திய ஆடை ஏற்றுமதி 8.5% உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக கடந்த ஆண்டு இதே காலத்தில் 15% சரிவு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 17.3% அதிகரித்துள்ளது. பங்களாதேஷின் ஆடைத் தொழிலில் ஏற்பட்ட இடையூறு, குறிப்பாக அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகள், சர்வதேச வாங்குபவர்களை மாற்று சப்ளையர்களைத் தேட வழிவகுத்தது.

அமெரிக்க ஏற்றுமதி

பங்களாதேஷின் அமெரிக்க ஏற்றுமதி சரிவு

பங்களாதேஷில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் முந்தைய ஆண்டை விட 2024 ஜனவரி-ஜூன் மாதத்தில் 11% குறைந்துள்ளது. இதன் விளைவாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்தையில் அதிக பங்கைக் கைப்பற்றி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் சாதனை லாபத்தைப் பதிவு செய்துள்ளன. கிடெக்ஸ் நிறுவனத்திற்கான 2024-25 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து ரூ.39.94 கோடியை எட்டியது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான அஜய் சஹாய், இந்த மாற்றம் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி ஆர்டர்களில் 10-20% உயர்வுக்கு வழிவகுக்கலாம் என்றார். இது இந்திய ஆடைத் துறைக்கான மாதாந்திர வணிகத்தில் 300-400 மில்லியன் டாலர்களை கூடுதலாக சேர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.