Page Loader
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்க விலை: சவரன் ரூ.66 ஆயிரத்தை தாண்டியது
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்க விலை

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்க விலை: சவரன் ரூ.66 ஆயிரத்தை தாண்டியது

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2025
06:35 pm

செய்தி முன்னோட்டம்

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று இரண்டாவது முறை புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.110 உயர்ந்து ரூ.8,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.880 உயர்ந்து ரூ.65,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.120 உயர்ந்து ரூ.8978-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.71,824 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post